Thursday 2 August 2012

கலவரத்தில் உறைந்து கிடக்கிறது அசாம் மாநிலம்... கலவரத்தை ஒடுக்காமல் ஒட்டு வங்கிக்காக வேடிக்கை பார்க்கிறதா காங்கிரஸ் அரசுகள் ?

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் போடோ பழங்குடியினத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் கடந்த ஒரு வார காலமாகவே நீடித்து வருகிறது. கலவரத்தில் மரணமடைவோரின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண...்டே வருகிறது.பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது அசாம் மாநிலம். ஆனால், மத்திய காங்கிரஸ் அரசும் மாநில காங்கிரஸ் அரசும் இந்தக் கலவரத்தை இன்னமும் வேடிக்கை மட்டுமே பார்கின்றன .போடோ பழங்குடியினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரம் நடைபெறுவது இது நான்காவது முறை. 1952, 1993, 1996 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. பல மாதங்கள் நீடித்த முந்தைய கலவரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.இப்போது நான்காவது முறையாக இந்த இரு சமூகத்துக்கு இடையே கலவரம் மூண்டுள்ளது. இதுவரை 44 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.தற்போதைய கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மாநில அரசு என்பது வெளிப்படை. ஜூன் 30-ம் தேதி, ஒரு முஸ்லிம் தச்சுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதும், அதற்கு போடோ பழங்குடியினர் காரணம் எனக்கூறி, ஊர்வலம் நடத்தியதும் காவல் துறைக்கும் அரசுக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து, காமதபூர் விடுதலை அமைப்பைச் சேர்ந்த 2 போடோ இளைஞர்கள் ஜூலை 5-ம் தேதி பதிலடியாகக் கொல்லப்பட்டவுடனேயே அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். களத்தில் இறங்கியிருக்க வேண்டும். செய்யத் தவறிவிட்டது. அதன் விளைவாக, ஜூலை 19-ம் தேதி மேலும் 4 போடோ இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த நாளே மேலும் 3 பேர் கொலை. கலவரம் காட்டுத் தீயாகப் பரவிவிட்டது.போடோ பழங்குடி மக்கள், அசாம் மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பழங்குடிகளில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள். தேயிலைத் தோட்டங்கள் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெறத் தொடங்கியபோது,தேயிலைத் தோட்டத்தில் வேலை தேடி வங்காளமொழி பேசும் முஸ்லிம் தொழிலாளர்கள் வங்க தேசத்திலிருந்து ஊடுருவினர். எல்லை கடந்து வருவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடியது. இவர்களைக் கணக்கெடுக்கவோ அல்லது புலம்பெயர்ந்தவர்கள் என்று பட்டியலிடவோ அசாம் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த 30 ஆண்டுகளில் போடோ இனத்தவரைவிட முஸ்லிம்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகமானது. இவர்களை வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் இன்று வரை பயன்படுத்தி ,மதசார்பின்மை நாடகம் நடத்தி வருகிறது .. இந்நிலையில், "அசாம் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று சொல்லிக்கொள்கிறது சீனா. முஸ்லிம்களுக்கு ஆதரவாக "உல்பா-தீவிரவாதிகளை ஆயுதங்களாக பயன்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாக குற்ற சாட்டுகள் வந்த வண்ணம் இருகின்றன . மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்கும் தீவிரவாதிகள், மக்களை ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தக் கலவரத்தைத் தூண்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மக்களை மக்களுடன் மோதிச் சாகச் செய்வதைவிட வேறு என்ன பாதகத்தை தீவிரவாதம் உண்டுபண்ண முடியும் ? வேண்டுமென்றே தொடர்ந்து சில போடோ பழங்குடிகளைக் கொன்று, முஸ்லிம்கள் மீதான கோபத்தை வெடிக்கச் செய்யும் உத்தியாக இது ஏன் இருக்கக்கூடாது? மத்திய அரசின் புலனாய்வுத் துறை இது பற்றியும் யோசிக்க வேண்டாமா ? கலவரம் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனேயே அங்கே ராணுவம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கலவரம் மிகப் பெரியதாக வெடித்த பிறகுதான் ராணுவம் அங்கே சென்றுள்ளது. இதை வெறும் இனக்கலவரமாகக் கருத முடியவில்லை. இதன் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் புரிதல் இல்லாமல், இந்த விவகாரத்தை அணுகினால் தீர்வு கிடைப்பது அரிது.இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மதத்தவர்கள் சிலர் இன்னும் தான் மதத்தை சார்த்த நாடுகளுக்கு விசுவாசமாகவும் ,இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு உதவியாகவும் தான் இருகின்றனர் ,அவர்களை இனம் கண்டு நாட்டு பற்றை போதிக்க வேண்டும் ,இல்லை என்றால் நாடு கடத்த வேண்டும் என்பது என்னுடைய வாதம் .எது எப்படி நடந்தாலும் அரசியல் ஆதாயத்துக்காகவும், தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வங்க தேச அகதிகளை அதிக அளவில் அசாமில் குடியேறச் செய்தது காங்கிரஸ் கட்சி. அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஷ்வர் சைக்கியாவின் குறுகிய கண்ணோட்டம்தான் இன்று ஓர் இனக்கலவரமாக வெடித்து, தீவிரவாதிகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைக் களமிறக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், பேராபத்து இந்தியாவை எதிர்நோக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை --

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?

இந்துமதத்தை மட்டும் போட்டு தாக்கும் மீடியாக்கள் ....

நித்தியானந்த ,காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தை சார்ந்த வர்கள் இவர்கள் பகிரங்க குற்ற பின்னணியில் இருகிறார்கள் என்பது உண்மை .. பல மோசடிகள் செய்து மக்களை ஏமாற்றும் மற்ற மத தலைவர்களை மீடியாக்கள் கண்கொள்ளததன் நோக்கம் என்னவோ ?
ஒரு சில குற்றங்கள் உங்களுக்காக ..கீழே !!
ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வெளி நாடுகளில் இருந்து தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை பரப்பி தன் உயிரை விட்டவர்களும் உண்டு. ஆனால் இன்று இருக்கும் ஆன்மிகவாதிகளோ மதத்தை பரப்புகிறேன் என்று கூறி வசதியையும் செல்வாக்கையும் அடையவே ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வானொலியில் கிறிஸ்த்துவத்தை பரப்பவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கிய JESUS CALLS டிஜிஎஸ் தினகரன் குடும்பத்தினரின் வாழ்க்கை இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர்களுடைய நிகழ்ச்சியை மொழிபெயர்த்து வெளியிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர்.
தீர்க்கதரிசனம் சொல்வது
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இவர்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள், அந்த கூட்டத்தை கூட்ட இவர்கள் சொல்லும் வார்த்தை "இந்த ஆண்டுக்கான தீர்க்கதரிசனம்" வழங்குகிறார் பால்தினகரன் என்பதுதான். அந்த கூட்டத்தில் கடவுள் இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொன்னார் என்று ஒவ்வொன்றாக சொல்வார்(ஆடியில காத்தடிக்கும், ஐப்பசில மழையடிக்கும்னு). பொத்தாம் பொதுவாக சொல்லுவார். குறிப்பாக எதையும் சொல்லமாட்டார். கடவுளுக்கு வேற வேலை இல்லையா? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொல்வதுதான் வேலையா?. அப்படி உண்மையில் கடவுள் இவர் காதில் வந்து நடப்பதை முன்கூட்டியே சொல்கிறார் என்றால் பேரழிவுகளை பாற்றி சொல்ல வேண்டியது தானே, மக்களாவது உயிர்ப்பிழைப்பார்கள் அல்லவா இல்லை இவர்கள் அப்பா இறப்பதையாவது முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே? இவரின் சகோதரி ஏஞ்சலை கர்த்தர் ஏன் காப்பாற்றவில்லை? டிஜிஎஸ் தினகரன் ஏன் மூட்டுவலிக்கு மருத்துவமனைக்கு ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும்.
ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
உண்மையில் மதத்தை பரப்புபவன் தனக்கு ஏதேனும் ஆபத்து, கஷ்ட்டம் வரும்போது கடவுளிடம் பிரார்த்திக்கவேண்டும் என்றுத்தான் பிரசங்கம் பண்ணுவான். ஆனால் இந்த கொள்ளை கூட்டமோ உங்களுக்கு எந்த ஒரு கஷ்ட்டமாக இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று தொலைக்காட்சிகளிலும், புத்தகங்களிலும் தங்களுடைய தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்துகின்றனர். தனக்காக இன்னொருவன் பிரார்த்தித்தால் கடவுள் கேட்டுவிடுவாரா?
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை:
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறேன் என்று பள்ளி மாணவர்களை அழைத்து கட்டாய காணிக்கை பெற்று வருகின்றனர். அது என்ன கட்டாய காணிக்கை என்று கேட்க்குறிங்களா? ஆம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திருக்கு வந்திருக்கும் மாணவர்களை ஒரே நேரத்தில் எழுந்து நிற்கச்சொல்லி அவர்கள் காணிக்கை அளித்தப்பின் அமரச்சொல்வார்கள் அங்கே வந்த மாணவர்கள் வேறு வழி இல்லாமல் காணிக்கை செலுத்தியபின்தான் அமருவார்கள்.
இவர்களுடைய அப்பா நோய்வாய் பட்டு இறந்தபோது இவர் மற்றவர்களுக்கு ஜெபம் செய்து சுகமளிக்கிறேன் என்று தொலைக்காட்ச்சியில் சொல்லி பிரசங்கம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?
கும்பகோணம் தீவிபத்தால் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கே வந்த குழந்தையை இழந்த பெற்றோர்களின் கதறலையும் அழுகையையும் வீடியோ எடுத்து அதையும் vcd போட்டு விற்ற ஒரு பயங்கரமான கொள்ளை கும்பல் தான் இவர்கள். அங்கே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திருக்கு வந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றுதான் வந்து அழுது புலம்பினர். ஆனால் இவர்கள் அவர்கள் அழுவதையும் அவர்களுக்கு பால்தினகரன் ஆறுதல் சொல்வதையும் வீடியோ எடுத்து வியாபாரமாக்கி பணம் சம்பாத்தித்தனர். இது ஒரு உதாரணம் மட்டும்தான் இன்னும் பல மோசடிகள் உள்ளன இவர்கள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் மக்களை அழைத்து அவர்களுடைய் நிலையை கேட்பது போலவும், அவர்கள் அழும்போது ஆறுதல் கூறுவது போலவும் நடித்து அதை வீடியோவாக எடுத்து தொலைக்காட்சியில் வெளியிடுகின்றனர், இதைப்பார்ப்பவர்கள் மனம் உருகி காணிக்கை அனுப்புவார்கள் என்று.கிறிஸ்த்துவத்தை பரப்பிகிறேன் என்று கூறிக்கொண்டு கடவுள் படத்தை எதிலும் காட்டாமல் இவர்களுடைய புகைப்படத்தைத்தான் இவர்களுடைய அலுவலகத்திலும், தொலைக்காட்சியிலும், மாத இதழ் புத்தகத்திலும் வெளியிடுகின்றனர். அதேப்போல் மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் கூட கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்று பரிந்துரைப்பது இல்லை எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள், கடிதம் எழுதுங்கள் என்றுத்தான் பரிந்துரைக்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் கடவுள் இல்லை நாங்கள் தான் கடவுளின் மறு அவதாரம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.,,---

கோட்சேவின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை ! வெளிவராத உண்மை !


காந்திஜியை சுட்டு கொன்ற பின் நாதுராம் கோட்சே அழித்த பரபரப்பு வாக்குமூலம் !! கோட்சேவின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை ! வெளிவராத உண்மை !

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது....

இவர்களை கேட்க யாரும் இல்லையா ? மீண்டும் வராதா மத மாற்ற தடை சட்டம் ? --- ஓர் உண்மை சம்பவம் --இடம் நாகர்கோவில் ,வடசேரி குமரி மாவட்டம் .

இவர்களை கேட்க யாரும் இல்லையா ? மீண்டும் வராதா மத மாற்ற தடை சட்டம் ? --- ஓர் உண்மை சம்பவம் --இடம் நாகர்கோவில் ,வடசேரி குமரி மாவட்டம் .
ஒரு கிறிஸ்தவப் பிரசாரக் கூட்டத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இன்முகத்துடன்தான் வரவேற்றேன். உங்களிடம் சிறிது நேரம் உரையாடலாமா என்று ஆரம்பித்தார்கள். அப்படி என்ன பேச வருகிறார்கள்,எந...்த விதத்தில் எவ்வாறு ஆரம்பிக்கிறார்கள் என்பதை அறியும் ஆர்வம் எனக்கு இருந்ததால் சம்மதம் தெரிவித்தேன்.முதலில் என்னிடம் ஒரு கேள்வியிலிருந்து தொடங்கினர். “உங்களுக்கு வாழ்வில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா, இருந்தால் எங்களிடம் மனம் விட்டுக் கூறுங்கள். எங்களால் உங்கள் துன்பங்களையும் கவலைகளையும் தீர்க்க முடியாது என்றாலும் நம் தேவனால் கண்டிப்பாக அமைதியைக் கொடுக்க இயலும். அந்த அமைதியை உங்களிடம் கொடுக்கவே தேவன் எங்களை உங்களிடம் அனுப்பி உள்ளான்.“எனக்கு துன்பம் என்று எதுவும் இல்லை, இருந்தாலும் அவ்வளவு எளிதில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது” என்றேன் நான்.“இல்லை. உங்கள் கண்கள் சொல்கின்றன; உங்கள் மனதில் சமாதானம் இல்லை. தேவன் கூறியுள்ளான், எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் மனம் விட்டுக் கூறினால் அழிந்து போகும். கூறுங்கள்!” என்றனர். தெரியாமல் இவர்களிடம் மாட்டிக் கொண்டேன் என்பதை உள்ளுணர்வு அப்போதுதான் எச்சரித்தது. வெளியே போங்கள் என்று அதிர்ந்து கூறவேண்டும் என்றில்லை, “தயவுசெய்து போய்வாருங்கள்,” என்று சமாதானமாகச் சொல்லக்கூட மனதளவில் நான் தயாராகவில்லை..அவர்கள் மேலும் தொடர்ந்து கொண்டே இருந்தனர், இந்த வேளையில்தான் கடைக்குச் சென்றிருந்த என் அம்மா வீட்டிற்குள் வந்தார். யார் இவர்கள் என்று கண்களாலேயே கேட்டார். இதைப் புரிந்து கொண்ட கூட்டம் அவர்களாகவே கூறினார்கள், “உங்கள் மகனுக்குக் கிடைத்த புதிய நண்பர்கள்!”அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வந்தவர்களை உபசரிப்பது நம் பழக்கம் என்பதால், “வாழைப் பழம் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டார். “தேவன் தரும் பழம் இங்கிருந்துதான் கிடைக்கும் என்றால் சந்தோசமாகப் பெற்றுக் கொள்கிறோம்…” என்று அவர்கள் பாணியிலேயே பதில் கூறினார்கள்.பூஜை அலமாரியில் இருந்த பழத்தை எடுத்துக் கொடுக்குமாறு அம்மா சைகை செய்துவிட்டு, அவர்கள் குடிப்பதற்காக அடுப்பில் பால் சுடவைக்க உள்ளே சென்றுவிட்டார். நானும் வந்தவர்களுக்கு ஆளுக்கொரு பழம் எடுத்துக் கொடுத்தேன்.. நான் கொடுத்த பழத்தை வாங்க மறுத்தனர். “கடைக்குச் சென்று வேறு பழம் வேண்டுமானாலும் வாங்கித் தாருங்கள்; இந்தப் பழம் வேண்டாம்,” என்று சொல்லிவைத்ததுபோல் அனைவரும் மறுத்தனர்.“இல்லை, இது இன்று வாங்கிய பழம்தான்; நன்றாக உள்ளது” என்றேன் அப்பாவியாக.ஆனால் அப் பாவிகள், “வேண்டாம் இதை நீங்கள் பூஜை அலமாரியில் இருந்து எடுத்தீர்கள், அது உங்கள் கடவுளுக்குப் படைக்கப் பட்டதாக இருக்கலாம். அந்தப் பழத்தை நாங்கள் சாப்பிடுவது கிடையாது” என்று முகத்தில் அடித்தது போலக் கூறினார்கள். பழத்தை அவர்கள் சாப்பிடவில்லை என்பதை விட, தொடக் கூட இல்லை என்பதுதான் என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..என் வீட்டிற்கே வந்து என்னையே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நமது கலாசாரத்தின் மிக உன்னதமான பண்பாடு விருந்தோம்பல், அதையே அசிங்கப்படுத்தும் இவர்களால் என்ன நிம்மதியை எனக்குத் தந்துவிட முடியும்? பொதுவாக, கடையில் இருந்து வங்கி வரும் பழங்களை பூஜை அலமாரியில் வைப்பதுதான் அப்பாவின் பழக்கம். ஏன் என்றால் அப்போதுதான் அது பார்வையாக இருக்கும், நாங்களும் மறக்காமல் எடுத்து சாப்பிடுவோம். இந்தத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலையில் நானும் இல்லை. அதை ஏற்றுக் கொள்ளும் பரிசுத்த நிலையில் அவர்களும் இல்லை. அதற்குமேல் ஒரு நிமிடம் கூட என் வீட்டில் அவர்கள் இருப்பது எனக்குப் பிடிக்காவிட்டாலும் வீட்டுக்குள் வந்தவர்களை வெளியே போகச்சொல்வதற்கான வார்த்தைகள் கிடைக்காமல் திகைத்திருந்தேன்.எந்த தவறும் செய்யாமலே அவமானத்தில் சிறுத்து நான் அமர்ந்திருக்க, அவர்களோ எந்தக் கூச்சமும் இல்லாமல் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து…அதற்கு ஐம்பது ரூபாயும் கேட்டனர். அந்தப் புத்தகத்தின் பெயர் “சாத்தானிடம் இருந்து விடுதலை”. நான் வாங்க மாட்டேன் என்று மறுக்கவே, இருபது ரூபாய்க்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசினார்கள்.இதற்கு மேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. என்னால் வாங்க முடியாது, என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம், எனக்கு வேலை இருக்கிறது. நான் கிளம்பப் போகிறேன் என்றேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை, இலவசமாகவே தருகிறோம் என்று என் கையில் திணித்தனர்.நான் செய்வதறியாமல் முழிக்கவே என் அம்மா சுதாரித்துக்கொண்டு முன்வந்து, அவர்களைத் திட்டி வெளியே அனுப்பினார். அதற்குப் பின்பு எனக்கும் திட்டு விழுந்தது என்று சொல்லவா வேண்டும்? ஆனாலும் சைத்தான்களிடம் இருந்து விடுதலை கிடைத்ததால் நிம்மதியாகவே இருந்தது. உங்கள் கஷ்டங்களைக் கூறுங்கள் அமைதியை தருகின்றோம் என்று நாக்கில் தேன் ஊறக் கூறும் இவர்களின் நெஞ்சில் ஊறுவது நஞ்சு என்பது ஏன் நம் மக்களுக்குத் தெரிவது இல்லை? இன்று மைனாரிட்டியாக இருக்கும்போதே நம் கடவுளை எந்தக் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் சைத்தான் என்று கூறுபவர்கள், நாளை பெரும்பான்மை ஆகும்போது என்னையே சைத்தான் என்று கூறிக் கொலை செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? இது என்றோ ஒரு நாள் யாரோ ஒருவருக்கு நடக்கும் அசாதாரண விஷயம் இல்லை. நம்மில் பெரும்பாலானோருக்கு நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. மூன்று நாள்களுக்கு முன்னர் கூட என் நண்பன் வீட்டிற்கு இதே போன்று ஒரு கூட்டம் வந்துசென்றதாகக் கூறினான். இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் செல்கின்றார்கள் என்றால், இவர்களுக்கு தொழிலே இதுதானா? வருமானம் எப்படி வருகிறது? இவர்கள் அன்றாடத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்வார்கள், இவர்களது குழந்தைகளை எப்படிப் படிக்க வைப்பார்கள்? ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது பத்து பேராவது செயல்பட்டால், மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் எவ்வளவு கூட்டங்கள் செயல்படும்? அப்படி என்றால் பல ஆயிரம் மதமாற்ற ஊழியர்களுக்கும் ஏதோ ஒரு பின்புலத்தில் இருந்து பணம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இவர்கள் அனைவரும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு மதமாற்றம் செய்கின்றனர். இறைவனுக்காக, இறைவனின் பெருமைகளைக் கூறுவதற்காக ஒருவனும் மதமாற்றம் செய்யவில்லை. உடல் உழைத்து வேலை செய்ய வலித்து, பேசிப்பேசியே ஒருவனை மதம் மாற்றி காசு சம்பாதிக்கும் கூட்டமாகத்தான் இந்தியா முழுவதும் வலம்வந்துகொண்டு இருக்கிறார்கள். பல ஆயிரம், பல இலட்சம் மக்கள் மதமாற்ற அறுவடையில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஒரு மதமே தீவிரமாக மதமாற்ற வேலையைச் செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது..வெளிநாட்டுக் கருப்புப் பணங்களை மதமாற்றம் என்னும் பெயரில் வெள்ளையாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதைக் கண்டுகொள்ளாமல் விடும் அரசாங்கமும் இவர்களுக்கு உடந்தையாகவே உள்ளது. மதமாற்றத்திற்குப் பணம் வருகிறது; தீவிரவாதத்திற்குப் பணம் வருகிறது; அதை எல்லாம் கண்டு கொள்ளாத அரசு, நமது கோயில் பணங்களைக் கொண்டுதான் தன் கஜானாவை நிரப்புகிறது. இந்த மைனாரிட்டிகளை மேன்மேலும் போஷிக்கிறது.இவர்கள் மெல்ல மெல்ல நம்மைக் கொல்லும் விஷம் போன்றவர்கள்; அன்பாகப் பேசுவது இவர்கள் வழக்கம்; ஆனால் பண்பில்லாமல் நடப்பது இவர்களது வாடிக்கை. எங்கள் கடவுளை வணங்குங்கள் குறைகள் தீரும் என்று அன்பாகக் கூறி சாத்தான் வழிபாட்டு முறையை நிறுத்துங்கள் என்று பண்பில்லாமல் ஊளை இடத் தொடங்குவார்கள்.நம் போன்ற பெரியவர்களையே மூளைச் சலவை செய்து மதமாற்றும் இவர்கள் நம் குழந்தைகளை மட்டும் விட்டுவைப்பர்களா என்ன? மத வகுப்புகளை இவர்கள் குழந்தைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். தெருவில் விளையாடும் நம் பிள்ளைகளையும் அழைத்து நயமாகப் பேசி இனிப்பு கலந்த நஞ்சை வாரி வழங்குவார்கள். மதமாற்றத்தின் விதையை குழந்தைகளிடம் ஊன்றும் தந்திரமான முயற்சி இது. இனிப்பில் மயங்கும் பிள்ளைகளிடம் மதம் மாற்றும் அநாகரிகத்தைக் கூட நாகரிகமாகச் செய்ய இவர்களால் மட்டுமே முடியும். நய வஞ்சகர்களின் சூழ்ச்சியைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நம்மை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். இதை அவர்களின் வெற்றி என்பதை விட நமது தோல்வி என்றுதான் கொள்ள வேண்டும்..அன்பை மட்டுமே போதிக்கும் என்று சொல்லும் கிறிஸ்துவ மதத்தில் இதனை அநாகரீகங்கள் ஏனோ ?-- அரவிந்த்See More.LikeUnlike ·  · Share · July 17 at 9:12pm ·

தேனீ